×

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹25 லட்சம் மதிப்பிலான தங்கக்கை நன்கொடை

*காசி மடாதிபதி வழங்கினார்

திருமலை :  திருப்பதி ஏழுமலையானுக்கு ₹25 லட்சம் மதிப்பிலான தங்க கையை காசி மடாதிபதி நன்கொடையாக நேற்று வழங்கினார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காசி மடத்தின் பீடாதிபதி சமயந்திந்திர தீர்த்த சுவாமி நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.  அவரைதேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி,   துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத்  வரவேற்றனர்.பின்னர், காசி மடத்தின் பீடாதிபதி சமயந்திந்திர தீர்த்த சுவாமி ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்ட கையை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார்.

Tags : Tirupati Ezumalaiman Kasi Madathipathi Gifted A Golden Hand , tirupathi , lord venkatachalapathi,Golden Hand, Dination
× RELATED நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 17 செ.மீ. மழை பதிவு..!!